search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக் அதாலத்"

    தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.
    சென்னை:

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத், தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு முறையும், மாநில அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகின்றன.

    லோக் அதாலத்தில், செக் மோசடி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் சம்மதத்துடன் சுமூக முடிவு எடுக்கப்படும். இதற்காக ஒரு நீதிபதி மற்றும் 2 உறுப்பினர்கள் கொண்ட அமர்வை மாநில சட்டப்பணி ஆணைக்குழு உருவாக்கும்.

    இதுபோன்ற மாபெரும் லோக் அதாலத் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், கோவிந்தராஜ், பவானி சுப்பராயன், அப்துல் குத்தூஸ், தண்டபாணி, ராஜமாணிக்கம், சுப்பிர மணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், சரவணன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு மதுரை கிளையில் 6 நீதிபதிகள் தலைமையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போல மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகம் முழுவதும் 468 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அமர்வுகள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில், எத்தனை வழக்குகள் சுமூக முடிவுக்கு வந்துள்ளது என்பது குறித்து மாலையில் தான் தெரிய வரும். #tamilnews
    தமிழகத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 77,785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.262½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டு, சப்-கோர்ட்டுகளிலும் நேற்று லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடந்தது. இதில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 77 ஆயிரத்து 785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 கோடியே 66 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

    தஞ்சாவூரில் நடந்த சாலை விபத்தில் இறந்த தம்பதிக்கு இழப்பீடு கோரி அவரது மகள்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயேந்திரன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் 2009-ம் ஆண்டு அரசு பஸ் மோதி பலியாகினர். விஜயேந்திரனின் இரு மகள்களும் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் ரூ.94 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், விஜயேந்திரனின் இரு மகள்களுக்கும் அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.84 லட்சத்து 39 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

    தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்த மெகா லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீடு தர ஒப்புக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து இழப்பீடு தொகைக்கான காசோலையை நீதிபதி சரவணன், விஜயேந்திரனின் மகள்களிடம் வழங்கினார்.
    ×